“முத்தம் கொடுக்க மட்டும் தான் முன்னாடி வருவியா?”... பீட்டர் பாலை கிழித்தெடுத்த முதல் மனைவி ஹெலன்...!

First Published Jul 15, 2020, 7:35 PM IST

கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.இந்நிலையில் மீண்டும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் அளித்துள்ள பேட்டி சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

40 வயதில் வனிதா 3வது திருமணம் செய்து கொண்டதும், பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
undefined
பீட்டர் பால் சமாச்சாரம் வெளியே வராத வரை வனிதாவின் திருமணத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்கவிட்டு வந்ததாக பால் மீது எழுந்த பகீர் குற்றச்சாட்டு வனிதா மீதான எதிர்ப்பு அலைகளை அதிகரித்துள்ளது.
undefined
வனிதா - பீட்டர் பாலை திருமணம் செய்தது குறித்து சூர்யா தேவி என்பவர் தரக்குறைவாக விமர்சித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
undefined
இதையடுத்து நேற்று வனிதா துணை கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார். மேலும் தன்னை பற்றி தரக்குறைவாக விமர்சித்த தயாரிப்பாளர் ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் வனிதா.
undefined
இதையடுத்து எலிசபெத் ஹெலன் தனது தரப்பு நியாயங்கள் குறித்து அளித்துள்ள பேட்டி வெளியாகியுள்ளது. அதில், “முதலில் திருமணம் என அறிவித்த வனிதா, எதிர்ப்பு அதிகமானதும் வெறும் நிச்சயதார்த்தம் தான், லவ் எக்ஸ்சேஞ்ச் தான் என மாறி, மாறி ஏன் பேச வேண்டும்?.
undefined
என் பங்க‌ஷன் வீடியோவை ஒரு மில்லியன் பேர் பார்த்திருக்காங்க அதை அதிகமானோர் எதிர்க்கவில்லை என வனிதா சொல்கிறார். ஏனென்றால் நீ ஒரு சாக்கடை என அனைவரும் தெரியும், அதனால் தான் உன் மேல் கல்லை போட்டு, நாங்கள் அசிங்கப்பட தயாராக இல்லை என அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்” என சகட்டு மேனிக்கு ஆவேசமாக பேசியுள்ளார்.
undefined
“நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனது பதிலாக வனிதா வீட்டிற்கு போய் பீட்டர் பாலை இழுத்துக்கிட்டு வந்திருக்கனும். வனிதா வீட்டில் உட்கார்ந்து கொண்டு அவர் என்ன சொல்கிறாரோ, அதை தான் பீட்டர் பால் செய்கிறார்.
undefined
விஷயம் இவ்வளவு வெளியே தெரிஞ்ச பிறகும் ஏன் பீட்டர் பால் மக்களிடம் பேசவில்லை. எந்த பிரச்சனையும் கோர்ட்டில் தான் பார்ப்பேன் என பீட்டர் பால் கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.
undefined
எனக்கு தெரிந்தவரிடம் பீட்டர் பால் சொல்லியிருக்கார் சோசியல் மீடியாவில் எல்லாம் வந்து பேசமாட்டேன் என சொல்லியிருக்கார். ஏன் யூ-டியூப்பில் வந்து முத்தம் கொடுக்கும் போதும், கிஸ் அடிச்ச போட்டோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்யும் போதும் உனக்கு தெரியலையா?
undefined
எனக்கு தெரிந்தவரிடம் பீட்டர் பால் சொல்லியிருக்கார் சோசியல் மீடியாவில் எல்லாம் வந்து பேசமாட்டேன் என சொல்லியிருக்கார். ஏன் யூ-டியூப்பில் வந்து முத்தம் கொடுக்கும் போதும், கிஸ் அடிச்ச போட்டோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்யும் போதும் உனக்கு தெரியலையா?
undefined
“போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க கூட ஏன் பீட்டர் பாலை அழைத்து வரவில்லை. ஏன் புருஷனை உன் வீட்டில் வச்சிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு. தரதரன்னு அடிச்சிட்டு இழுத்துக்கிட்டு வரவா?, அதுக்கும் நான் ரெடி. உனக்கு தைரியம் இருந்தால் உண்மை என்ன என்பதை ஓபனாக ஒத்துக்கொள்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
undefined
click me!