எனக்கு புள்ள இல்லடா... பாலாஜியை கட்டி அணைத்து அழுத அர்ச்சனா..!

First Published Oct 28, 2020, 4:42 PM IST

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே, ஒரு தலை பாசமாக செயல்படுவதாக தன்னுடைய குற்றச்சாட்டை அழுத்தம் திருத்தமாக எடுத்து கூறி வருகிறார் பாலாஜி.
 

ரியோவின் கோவத்தை மறைக்க மாஸ்க் போட்டு கொள்வது தவறு இல்லை என அவர் கூறிய வார்த்தை, பாலாவிற்கு மட்டும் அல்ல, பார்க்கும் மக்களுக்கே இவர் ரியோவிற்கு ஆதரவாக பேசுகிறார் என்பது தெரிந்தது.
undefined
அதனை உண்மையாக்குவது போல் பல தருணங்களில் செயல்பட்டார் அர்ச்சனா.
undefined
இதைத்தொடர்ந்து, நேற்றில் இருந்தே பாலாஜி அர்ச்சனாவிற்குள் பற்றி எரியும் பிரச்சனை பெரிதாக வெடித்து, பாலாஜி அழுத காட்சிகள் மற்றும் அதற்கு ஷிவானி ஆறுதல் கூறிய காட்சிகள் இன்றைய புரோமோவில் இடம் பெற்றிருந்தது.
undefined
இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், அர்ச்சனா பாலாஜியிடம் உனக்கு என்னை பிடிக்கவில்லை என்பது இன்றைக்கு மட்டும் இல்ல, முதலில் இருந்தே பிடிக்கவில்லை. எனக்குள் இருக்கும் ஒரு அம்மா, நான் திரும்ப திரும்ப மிஸ் பண்ணுகிற ஒரு குழந்தையை உனக்குள் தேடி கொண்டு இருக்கிறேன்.
undefined
நான் அந்த குழந்தை இல்லை என்பதை நீ எனக்கு சொல்லியாச்சு, நான் தள்ளி நிற்கிறேன் என அர்ச்சனா அழுகையோடு கூறுகிறார்.
undefined
எனக்கு தெரியுது உனக்குள்ள அது இல்லை என்பது. நீ வேண்டாம் வேண்டாம் என சொன்னால் நான் எங்கடா போவேன்... என அழுகிறார்.எனக்கு புள்ள கிடையாது டா, எனக்கு நீ பிள்ளையா வேண்டும் என பாலாஜியை கட்டி பிடித்து தன்னுடைய பாசத்தை கொட்டுகிறார்
undefined
முதல் புரோமோவில், பாலாஜியை வார்த்தையால் நோகடித்து அழ வைத்த அர்ச்சனா எமோஷனலாக தாய் பாசத்தை கொட்டியுள்ள காட்சிபார்பவர்களையே பாசத்தில் கண் கலங்க வைத்துள்ளது.
undefined
click me!