ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் குறித்து அவரது மகளும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் முதன்முறையாக தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அப்பாவின் குறைந்த திரைநேரம் போன்ற விஷயங்கள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் "கூலி". கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், கடந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை இப்படம் பிடித்தது. இந்நிலையில், ரஜினிகாந்தின் மகளும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படம் குறித்து முதன்முறையாகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
25
வெளிப்படையான பதில்
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள “வித் லவ்” திரைப்படம் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி ஒன்றில், "கூலி படம் உங்களுக்குப் பிடித்ததா?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஒரு ரசிகையாகவும் மகளாகவும் தனது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறினார்.
35
பிடித்தமான மற்றும் பிடிக்காத விஷயங்கள்
சௌந்தர்யா கூறுகையில், "கூலி படத்தின் இறுதி 10 நிமிடங்களில் இடம் பெற்ற ‘டி-ஏஜிங்’ காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பாவை மீண்டும் பழைய தோற்றத்தில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும், ஒரு தீவிரமான ரஜினிகாந்த் ரசிகையாக, அவரைத் திரையில் இன்னும் அதிகமாகப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன்," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "எனக்குப் படம் பிடித்திருந்தது, ஆனால் அப்பாவின் படங்களில் இது எனக்கு மிகவும் பிடித்த படங்களின் பட்டியலில் இல்லை" என்று நேர்மையாக தெரிவித்தார்.
தற்கால சினிமா போக்கு குறித்துப் பேசிய அவர், "இக்காலத்து மக்கள் படங்களில் அதிகப்படியான வன்முறையை விரும்புவதில்லை என்று நான் நினைக்கிறேன். கூலி படம் பற்றி அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. லோகேஷ் கனகராஜ் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு, அவர் பல சிறந்த படங்களைக் கொடுத்தவர்," என்று தனது கருத்தை நிறைவு செய்தார்.சௌந்தர்யா ரஜினிகாந்தின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
55
அப்பா போலவே நேர்மையான பேச்சு
"கூலி" திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை ஈட்டியிருந்தாலும், ரஜினிகாந்தின் குடும்ப உறுப்பினரிடமிருந்தே இத்தகைய விமர்சனம் வந்திருப்பது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வன்முறை காட்சிகள் குறித்த சௌந்தர்யாவின் கருத்து, இன்றைய காலத்து இயக்குநர்களுக்கு ஒரு பாடமாகவும் பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் மீது தனக்கு இருக்கும் மரியாதையை விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் ஒரு ரசிகையாக தனது ஏமாற்றத்தையும் துணிச்சலாக பதிவு செய்திருக்கும் சௌந்தர்யாவின் இந்த நேர்மையான பேச்சு, தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.