15 வயதில் வேற லெவல்..! முதல் முறையாக வெளிநாட்டு ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட டிடி..!

First Published Jun 10, 2020, 1:48 PM IST

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தன்னுடைய 15 வயதில், முதல் முறையாக இலங்கையில், செல்வி சீரியல் படப்பிடிப்பு நடந்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார். 

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது 'டிடி' தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும்.
undefined
15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும்,இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது.
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் டிடி ஆடையின் அளவை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டே செல்கிறார். பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார்.
undefined
கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், டிடி-யில் வெளியில் எங்கும் ஷூட்டிங் செல்லாமல் உள்ளார். தன்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட்டு வருகிறார்.
undefined
கலகலப்பாக அங்கும், இங்கும் ஓயாமல் பிஸியாக இயங்கி கொண்டிருந்த இவரால் வீட்டில் ஒரே இடத்தில் இருக்க முடியாததால் அவ்வப்போது தன்னுடைய பழைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
undefined
அதே போல் வீட்டிற்குள் இருந்த படி க்யூட் போட்டோக்களை இன்ஸ்டாவில் தட்டிவிடுகிறார். சமீபத்தில் வீட்டிலிருந்தபடி, குட்டையான கவர்ச்சி உடை அணிந்த படி டிடி வெளியிட்ட செல்ஃபி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
undefined
அந்த வகையில் தற்போது... இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு, நடிகை ராதிகா நடித்து, அவனுடைய ரேடான் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருந்த, 'செல்வி' தொடரில் நடித்தார். அந்த தொடரின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்த போது எடுக்கப்பட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்போதே பாவாடை தாவணி என வேறு லெவல் அழகில் உள்ளார் டிடி. இந்த சீரியலில் நடிக்கும் போது, டிடி க்கு 15 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!