இந்நிலையில் இன்னும் பத்து நாட்களில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், நாயகன் அல்லு அர்ஜுன் மற்றும் நாயகி ராஷ்மிகா மந்தானா ஆகிய இருவரும் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் நடந்த ஒரு பிரம்மாண்ட விழாவில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தானா ஆகிய இருவரும் நேரில் கலந்து கொண்டனர். "என்னுடைய பயணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது இந்த சென்னை மண்ணில் இருந்து தான். ஆகவே இந்த மண் எனக்கு மிகவும் ஸ்பெஷல். உளவியல் ரீதியாக நான் தொடங்கிய இடத்திலேயே இப்போது இருக்கிறேன். தமிழ் மக்கள் தரும் இந்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியை அளிக்கிறது" என்று கூறி நேற்று நடந்த விழாவில் முழுக்க முழுக்க தமிழிலேயே பேசி அசத்தியிருந்தார் அல்லு அர்ஜுன்.