“ஷிவானி டாப்பிக்க விடுய்யா”... ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜிக்கு ரெட் கார்டு?

First Published Jan 2, 2021, 6:08 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ள சமயத்தில் பாலா செய்த இந்த காரியம் பார்வையாளர்களை வெறுப்படைய வைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக 90வது நாளை தொட்டுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்களே உள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார்.
undefined
தற்போது போட்டியாளர்களுக்கு ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு, அவர்களுடைய குடும்பத்தினர் வந்து சந்தித்து விட்டு சென்றனர். ஒவ்வொருவரும் போட்டியாளர்களுக்கு விதவிதமான அறிவுரைகளை வழங்கிச் சென்றனர். ஷிவானியின் அம்மா அவரை தாறுமாறாக விமர்சித்தது சோசியல் மீடியாவில் பேசும் பொருளானது. சொந்த மகளையே இப்படி விமர்சிக்கலாமா? என அனைவரும் விமர்சித்தனர்.
undefined
இதனிடையே இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோ வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாலா காதல் கண் கட்டுதுன்னு சொன்னிங்க... நீங்க பார்த்தீங்களா அது காதல் என ஆரியிடம் கேட்க, அதற்கு ஆரியோ அவ்வளவு தைரியம் இருந்தால் என்கிட்ட பேசுற மாதிரி அவங்க அம்மாகிட்ட பேச வேண்டியது தானே என கோபமாக பதில் கூறுகிறார்.
undefined
வீட்டில் உள்ள அனைவரும் இருவரையும் சமாதானம் செய்ய, ஆரி உடனே ஷிவானி டாப்பிக் யார் எடுத்தா இப்போ என்று கேட்க, பாலா உடனே கோவத்தின் உச்சிக்கே சென்று, ஷிவானி டாப்பிக்க உடுயா என்று பல முறை கத்துக்கிறார்.
undefined
ஆரியை அடிப்பது போல் கையில் சோபா குஷனை எடுக்கும் பாலா அதை கோவத்துடன் தூக்கி வீசுகிறார்.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ள சமயத்தில் பாலா செய்த இந்த காரியம் பார்வையாளர்களை வெறுப்படைய வைத்துள்ளது. கண்டிப்பாக இந்த செயலுக்காக பாலாவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என விமர்சித்து வருகின்றனர்.
undefined
click me!