நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தலைநகர் முதல் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரங்கள் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா, முதல்வர் விஜய்க்கு சல்யூட் அடித்து வரவேற்றார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ச. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழா இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழா என்பதால், நிகழ்ச்சிக்கு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.
Independence Day: இந்தியாவில் 'இந்த' ஊரில் மட்டும் ஆகஸ்ட் 16 தான் சுதந்திர தினம்! ஏன் தெரியுமா?