இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்து அறிந்த சாயீஷா எமோஷ்னல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, புனீத் ராஜ்குமார் எனது நண்பர், என்குடும்பத்தில் ஒருவர், நான் அனுபவிக்கும் வேதனையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இது ஈடு செய்யமுடியாத இழப்பு. அவருடைய மனைவி அஸ்வினி அக்கா மற்றும் மகள்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், என கூறியுள்ளார்.