வதந்தியை கொளுத்தி போட்ட ஊடகங்கள்..! சைலண்டாக இருந்து அதிரடியாக ஆப்பு வைத்த சமந்தா..!

First Published Oct 20, 2021, 6:47 PM IST

நடிகை சமந்தா (Samantha) மற்றும் நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்பும் விதமாக செய்திகளை வெளியிட்டு வந்த, 3  யூடியூப் சேனல் மீது சமந்தா தரப்பில் இருந்து அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ఇదిలా ఉంటే తాజాగా అగ్రస్థానంలో ఉన్న టాలీవుడ్ హీరోయిన్ లలో ఎక్కువ ప్రజాదరణ పొందిన హీరోయిన్ ఎవరు అని ఓర్మాక్స్ మీడియా సంస్థ (Ormax Media) తాజాగా సర్వే చేయగా అందులో ఎక్కువమంది సమంతకే (Samantha) ఓటు వేశారు. ఆ తర్వాత కాజల్, అనుష్క (Kajal, Anushka Shetty) తదితరులు ఉన్నారు.
 

இதுவரை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே தங்களுடைய விவாகரத்து குறித்தும், என்ன பிரச்சனை காரணமாக பிரிகிறோம் என்பது குறித்தும் தெரிவிக்காத நிலையில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கியது.

சமீபத்தில் கூட சமந்தா தன்னுடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீதமுடன் காட்டிய நெருக்கம் தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சில வதந்திகள் தீயாக பரவியது. பின்னர் ப்ரீத்தம் சமந்தா தன்னுடைய சகோதரி போன்றவர் என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதே போல் தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சமந்தா விளக்கம் கொடுத்த போதும், சில யூடியூப் சேனல்கள் சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதங்களை நடத்தின. 'சமந்தா தவறு செய்கிறார்' .. 'சமந்தாவின் விவாகரத்துக்கு என்ன காரணம்' .. என்பது போன்ற விவாதங்களை முன் வைத்தனர்.

சமந்தா, நாக சைதன்யா பிரிந்ததற்கான காரணங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் சில யூடியூப் சேனல்களில் பங்கேற்பாளர்களில் சிலர் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவதற்கு இவை தான் காரணம் என யூகங்கள் அடிப்படையில் சில தகவல்களை கூறினர்.

இதுவே சமந்தாவின் கோவத்தை தூண்டும் விதமாக அமைத்தது. பிரபல யூடியூப் சேனல் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று குகட்பள்ளி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த யூடியுப் சேனல்கள் சில சமந்தாவின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்ற தலைப்பில் சில பிரபலங்களுடனான நேர்காணலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நேர்காணல்களில் குடும்ப ஆலோசனை வழங்கும் ஒரு முக்கிய நபரும் பங்கேற்றார். சமந்தா பிரிவதற்கு பல காரணங்கள் இருப்பதாக அவர் கூறினார். சமந்தா வாடகைத்தாய் மூலம் மட்டுமே குழந்தைகளைப் பெற விரும்பினார். இது ஒரு காரணம் என்றால், தைரியமான கதாபாத்திரங்களில் நடிப்பது மற்றொரு காரணம். என வாயிக்கு வந்த தகவல்களை எவ்வித ஆதாரமும் இன்று பேசினர்.

இதன் காரணமாகவே இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்க்கு நீதி மன்றம் எப்படி? என்ன விதமான தீர்ப்பளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

click me!