சின்னத்திரையை விட்டு விரைவில் விலகப்போகிறேன்... ராதிகா சரத்குமாரின் திடீர் அறிவிப்பு...!

First Published Jan 28, 2021, 6:57 PM IST

1999ம் ஆண்டு முதல் சீரியல்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலக உள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் பாஞ்சாலியாக நடித்தவரா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மிளிர்ந்தார்.
undefined
80 களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த ராதிகா, தற்போது வரை வெள்ளித்திரையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்னதாக சரத்குமாருடன் ராதிகா நடித்த “வானம் கொட்டட்டும்” படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
undefined
ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா, சித்தி, அண்ணாமலை, அரசி, அண்ணாமலை, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி, சித்தி 2 என வரிசையாக சூப்பர் ஹிட் சீரியல்களை தயாரித்து வருகிறார்.
undefined
வழக்கமான சீரியல்களைப் போல் இல்லாமல் தைரியமான பெண்ணாக ராதிகா நடிக்கும் கதாபாத்திரத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
undefined
பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற கதையையே சித்தி தொடர் மாற்றியது. பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் வெளியான சித்தி சீரியலுக்கு ஆண்கள் பட்டாளமும் அடிமையாக இருந்ததை மறந்துவிட முடியாது.
undefined
1999ம் ஆண்டு முதல் சீரியல்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலக உள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
undefined
கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகிக்கும் ராதிகா, மெல்ல சின்னத்திரையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.
undefined
click me!