தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் கூட விஜய் சேதுபதி உடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் நடித்துள்ளார்.
undefined
இதுவரை 5 படங்களில் நடித்துள்ள இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் இவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
undefined
இந்த சமயத்தில் தான் இளம் நடிகை நிஹாரிகாவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது.ஆனால் அது உண்மையில்லை என இருதரப்பினரும் மறுத்தனர்.
undefined
கடந்த ஜூன் மாதம் நிஹாரிகாவிற்கும், குண்டூர் ஐஜி-யின் மகனுக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
undefined
மாப்பிள்ளை சைதன்யா ஐதராபாத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இளம் ஜோடிகள் இருவரும் திருமணத்திற்கு முன்னதாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
undefined
கொரோனா தொற்று காரணமாக திருமண தேதி நிச்சயிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், டிசம்பர் 9ம் தேதி ராஜ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined