தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர் திரு 420, நந்தா நந்திதா உட்பட மலையாளம், தெலுங்கு திரையுலகில் முன்ன்ணி நடிகையாக வலம் வந்தவர் மேக்னா ராஜ். இவருக்கும் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவிற்கும் 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
undefined
பெற்றோர் சம்மதத்துடன் காதல் கைகூடிய சந்தோஷத்தில் தம்பதியினர் திளைத்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
undefined
இந்த செய்தி கன்னட திரையுலகையே அதிர்ச்சியில் உறையவைத்தது. அப்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தது ரசிகர்களை வேதனையில் வாட்டியது.
undefined
சமீபத்தில் தான் மேக்னாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தனது கணவரே மீண்டும் பிறந்துள்ளதாக மேக்னா ராஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
undefined
இந்நிலையில் அந்த குழந்தை உட்பட குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
undefined
இதுகுறித்து மேக்னா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் வணக்கம். என் தந்தை, அம்மா, நான் மற்றும் என் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களை சந்தித்தவர்களிடம் இந்த முடிவு பற்றி தெரிவித்துள்ளோம். நாங்கள் நலமாக இருக்கிறோம் என ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
undefined
ஜூனியர் சிரஞ்சீவி சார்ஜா நலமுடன் இருக்கிறார். நாங்கள் அனைவரும் குடும்பமாக இந்த போரில் வென்று வருவோம் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து விரைவில் குணமடைய வேண்டிய ஒட்டுமொத்த ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
undefined