கணவரை கட்டி அணைத்த படி குஷ்பு... குறையாத அழகுடன் ஜொலிக்கும் கோலிவுட் தம்பதியின் வைரல் போட்டோ...!

First Published Aug 16, 2020, 3:51 PM IST

நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர் சியுடன் இருக்கும் போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். கறுப்பு வெள்ளையில் வண்ணமயமாக ஜொலிக்கும் அந்த போட்டோ லைக்குகளை அள்ளிக்குவிக்கிறது. 

இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு.
undefined
90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.
undefined
kushboo
undefined
பருவ வயதான 2 மகள்களின் தாய், அன்பான கணவர் என ஹாப்பியாக போய்கொண்டிருக்கிறது குஷ்புவின் வாழ்க்கை.
undefined
தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
undefined
1995ம் ஆண்டு ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமனி நடித்த முறைமாமன் படத்தை சுந்தர் சி இயக்கினார். அப்போது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் தீ பற்றியது.
undefined
5 ஆண்டுகள் காதலித்த வந்த இருவரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
undefined
சினேகா - பிரசன்னா, சூர்யா - ஜோதிகா என பல நட்சத்திர தம்பதிகள் தற்போது கோலிவுட்டில் வலம் வந்தாலும், இன்றளவும் பலரும் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வாழ்த்து வரும் க்யூட் ஜோடி குஷ்பு - சுந்தர் சி தான்.
undefined
தற்போது கணவர் சுந்தர் சியை பாசத்துடன் அரவணைத்த படி இருக்கும் கறுப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!