இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால்,48 வது பிறந்த நாளை கீழ்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் முதியோர்களுக்கு உணவருந்தி கொண்டாடினோம். அப்பா அம்மா வீடு ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வருடா வருடம் இந்த முதியோர் இல்லத்தில் உணவு கொடுப்பதற்கு வருவேன் அந்த வகையில் இன்று முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டதாக தெரிவித்தார்.
தனது பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடுவேன் என்று கூறிய கேள்விக்கு , தமிழ்நாட்டின் தாய்மார்களும் அம்மாக்களும் அப்பாக்களும் நான் எங்கு சென்றாலும் கேட்கும் கேள்வி உனக்கு எப்போது கல்யாணம் என்பது தான். இன்று இன்று மதியம் 12.30 மணியளவில் அதற்கான தகவலை வெளியிட இருப்பதாக கூறினார். என் திருமணம் இந்த வருடமே நடக்கும் என கூறினார்.