பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் சூர்யாவிற்காக ஒரே படத்தில் மூன்று பாடல்கள் பாடி கொடுத்த விஜய்..!

First Published Jun 13, 2020, 5:15 PM IST

தளபதி விஜய், தன்னுடைய நண்பரும் நடிகருமான சூர்யா நடிப்பில் வெளியான படத்திற்கு மூன்று பாடல்களை பாடியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
 

தளபதி விஜய் நடிகர் என்பதையும் தாண்டி நன்றாக பாட கூடியவர் என்பது அனைவரும் அறிந்தது தான். அவருடைய அம்மா ஷோபனா ஒரு பாடகி என்பதால், அவரின் சங்கீத களையும் இவருக்கு உள்ளது. இவர் பல பாடல்கள் பாடி இருந்தாலும் மாஸ்டர் படத்தில் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவருடைய அம்மா ஷோபனாவே, மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
undefined
தான் நடிக்கும் படங்களை தவிர, இவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்த போது , மற்ற சில நடிகர்களின் படங்களுக்கும் பாடியுள்ளார். அந்த வகையில் இவரின் நண்பர் சூர்யாவின் படத்திற்காக மூன்று பாடல்களை பாடியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
undefined
இவர்கள் இருவரும், சம காலத்தில் திரையுலகில் அறிமுகமான பிரபலங்கள். நெருங்கிய நண்பர்களும் கூட... இருவரும் இணைந்து, நேருக்கு நேர், ஃபிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களிலும் நண்பர்களாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
அஜித் - விஜய் ரசிகர்களுக்கும் போட்டி பொறாமையால் பல பிரச்சனைகள் வந்தாலும், இதுவரை சூர்யா, விஜய், ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு பிரச்னையும் வந்தது இல்லை.
undefined
படவிழாக்கள், விருது விழாக்கள் போன்ற எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, இருவரும் சந்தித்து கொண்டாலும் சிரித்த முகத்துடன் வரவேற்று தங்களுடைய நட்பை வளர்த்து வருகிறார்கள்.
undefined
விஜயகாந்த் உடன் சூர்யா நடித்த திரைப்படம் ’பெரியண்ணா’. இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ’பார்வை ஒன்றே போதுமே’ படத்திற்கு இசையமைத்த பரணி இசையமைத்த இந்த படத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியன் இரண்டு பாடல்களும் மலேசியா வாசுதேவன், ஹரிஹரன் மற்றும் எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் தலா ஒரு பாடல்களையும் பாடியுள்ளனர். மீதி மூன்று பாடல்களையும் சூர்யாவுக்காக விஜய் பாடியுள்ளார் என்பதும் இதில் இரண்டு பாடல்கள் தனியாகவும் ஒரு பாடலை ஸ்வர்ணலதாவுடன் இணைந்து பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
undefined
பெரியண்ணா படம் உருவானபோது விஜய் ஒரே நேரத்தில் நான்கு படங்கள் நடித்து பிசியாக இருந்தார். இருப்பினும் விஜய் தான் நடிக்காத படத்தில் சூர்யாவுக்காக 3 பாடல்களை தனது பிசியான ஷெட்யூலிலும் பாடிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
undefined
விஜய் - சூர்யா சிறிய வயதில் இருந்த போது, இருவரையும் வேறுபாடு பார்க்காமல் தன்னுடைய மடியில் அமர வைத்து கொண்டு எடுத்த அரிய புகைப்படம் இது.
undefined
click me!