1990ம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவை மையம் கொண்டு காமெடி புயலாக கலக்கி வருபவர் வைகைப் புயல் வடிவேலு. இன்று வரை வடிவேல் ஏதாவது ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க மாட்டாரா? எனும் ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
undefined
நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’,‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி ஸ்டைல், உடல்மொழி, வசனம் என ரசிகர்களை குதூகலப்படுத்தியவர்.
undefined
மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசித்து வந்த வைகைப் புயல் வடிவேலு சமீபத்தில், சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கிறார். இதிலே இவர் தான் நடிக்க ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்றது, 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படக்குழு.
undefined
இவரை பற்றிய சர்ச்சைகள் நீண்டு கொண்டே இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டு பேசி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் வடிவேலு.
undefined
உடல் மெலிந்து காணப்பட்ட இவர், 'கர்ணன்' படத்தில் இருக்கும் 'சேராத இடம் சேர்த்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா' என கனத்த குரலில் பாடி, சோகத்தை வெளிப்படுத்தியதோடு கண் கலங்கி அழுதார். மேலும் நீங்கள் எல்லாம் ஒரு வருடம் தானே லாக் டவுனில் இருக்கிறீர்கள் நான் 10 வருடமாக லாக் டவுனில் இருக்கிறேன் வீட்டிலேயே முடங்கி கிடப்பது எவ்வளவு ரணம் தெரியுமா என உருக்கமாக பேசினார்.
undefined
இப்போதும் என்னுடைய உடலில் தெம்பு இருக்கிறது, நடிக்க ஆசையும் இருக்கிறது, ஆனால் யாரும் வாய்ப்புக்கொடுப்பதில்லை என கலங்கினார்.
undefined
இதைத்தொடர்ந்து வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என அவருக்கு ஆதரவு குரல்கள் கூடியது. இதை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில், காமெடி ஹீரோ ஒருவரின் படத்தில்... மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
எம்டன் மகன் படத்தின் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்க உள்ள படத்தில் தான் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். இந்த படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined