ஜோ-க்கு சமைத்து போட்டு அசத்திய சூர்யா.... லாக்டவுன் நேரத்தில் சமையல்காரராக மாறி அட்ராசிட்டி...!

First Published Jun 12, 2020, 2:58 PM IST

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், நடிகர் சூர்யா தன்னுடைய காதல் மனைவி ஜோதிகா மற்றும் அன்பு குழந்தைகள் தியா, தேவுக்காக சமையல் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா - ஜோதிகா இருவரும், நான்கு வருடம் காதலித்து பெற்றோர் அனுமதியோடு திருமணம் செய்து கொண்டனர்.
undefined
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர்களுடைய திருமணத்தில், பல முன்னணி பிரபலங்கள் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பலர் கலந்து கொண்டு இந்த தம்பதிகளை வாழ்த்தினர்.
undefined
திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பிறந்து வளரும் வரை... திரையுலகின் பக்கமே தலை காட்டாமல் இருந்தார் நடிகை ஜோதிகா.
undefined
தியா - தேவ் பிறந்து... அவர்கள் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க தயாரானார். அதன் படி தன்னுடைய கணவர் தயாரிப்பில், மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, '36 வயதினிலே' படத்தின் மூலம் துவங்கிய இவருடைய ரீ-என்ட்ரி பயணம் தற்போது வரை வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது.
undefined
திருமணம் ஆகி குழந்தைகள் பெற்று கொண்ட பிறந்த பிறகும் கூட, இன்னும் காதல் பறவைகளாகவே சுற்றி வருகிறது இந்த ஜோடி.
undefined
மேலும் ஜோதிகாவின் ஆசை அறிந்து வாழ்க்கைக்கு மட்டும் அல்ல அவருடைய சினிமா கேரியருக்கும் உறுதுணையாக சூர்யா இருக்கிறார்.
undefined
பல்வேறு விதத்தில், குடும்பத்தில் மீதுள்ள பாசத்தையும் அக்கறையையும் வெளிக்காட்டி வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
undefined
அந்த வகையில் தற்போது, லாக் டவுன் நேரம் என்பதாலும்... ஷூட்டிங் பணிகள் இல்லாததாலும், குடும்பத்திற்காக சமைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
undefined
இதற்கு முன், கடந்த 2 வருடங்களுக்கு முன் சூர்யா மனைவி ஜோதிகாவிற்காக சுட்ட தோசை செம்ம வைரலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!