மாரடைப்பால் இறந்த நடிகர் சேது குடும்பத்தில் நடந்த நல்ல காரியம்... புது வரவால் உறவினர்கள் உற்சாகம்...!

First Published Aug 4, 2020, 12:44 PM IST

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', ,வாலிபராஜா', ' சக்க போடு போடு ராஜா', 50 / 50 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் இந்த வருடம் மார்ச் மாதம், மாரடைப்பு  காரணமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில், நடிகர் சேது மனைவி அவர் இறந்தபோது 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அழகிய ஆண் குழந்தைக்கு தாய் ஆகியுள்ளார்.
undefined
இதுவரை வெளியாகாமல் இருந்த தகவல் தற்போது அவருக்கு குழந்தை பிறந்த பின், வெளியாகியுள்ளது.
undefined
இதனால், சேதுவே அவர் மனைவி வயிற்றில் மகனாக பிறந்துள்ளார் என்று ரசிகர்களும், அவருடைய குடும்பத்தினரும் இந்த தருணத்தை கொண்டாடி வருகிறார்கள்.
undefined
36 வயதாகும் இவர், பிரபல தோல் நிபுணர்சர்மா பிரச்சனை என்றால் இவரை தான் முதலில் அணுகி, பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள். மேலும் இவர் பிரபல நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட.
undefined
இவர்மரணத்தில் போது, கொரோனா பிரச்சனை காரணமாக பல பிரபலங்கள் இவருடைய இறுதிசடங்கில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், முதல் ஆளாக சந்தானம் வந்து நின்றார். இறுதி சடங்கு வரை, கூடவே இருந்து.... கண்ணீர் விட்டு அழுது தன்னுடைய அஞ்சலியை செலுத்தினார்.
undefined
சேது உயிர் இந்த உலகை விட்டு பிறந்த 5 மாதத்தில், வீட்டுக்கு வந்துள்ள புது உறவால், அவர்களுடைய குடும்பமே தற்போது உட்சாகத்தில்உள்ளனர். ரசிகர்களும் குட்டி சேது பிறந்து விட்டார் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
undefined
click me!