தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ஜோஷ் என்கிற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இப்படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
24
இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தனர். 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண உறவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
34
விவாகரத்துக்கு பின்னர் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவருமே சினிமாவில் முழு கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். குறிப்பாக சமந்தாவின் கெரியர் விவாகரத்துக்கு பின்னர் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக சில வதந்திகள் பரவி வந்த போதும், அதனை இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.
44
இந்நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இம்முறை திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் நடிகை இல்லை என்றும் டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.