மீண்டும் ‘செம்பருத்தி’ சீரியலில் இணைகிறாரா கார்த்தி? சீரியல் குழுவின் Exclusive தகவல்!

First Published Jan 11, 2021, 5:43 PM IST

'செம்பருத்தி' சீரியலில் இருந்து விலகிய நடிகர் கார்த்தி மீண்டும் இதே சீரியலில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, உண்மை தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது செம்பருத்தி சீரியல் மட்டுமே. இல்லதரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினர் கூட இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
undefined
நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இத்தொடரில் அவரது மூத்த மகன் ஆதி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்து வந்தார்.
undefined
ஆதி - பார்வதி ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 800க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்து சீரியல் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில், அதன் ஹீரோ கார்த்திக் சீரியலில் இருந்து விலகினார்.
undefined
இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “செம்பருத்தி தொடரை தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் வெற்றியடைய வைத்த நடிகர் கார்த்திக்கு நன்றி. எதிர்பாராத சில காரணங்களால் அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்க உள்ளார். அவரது பயணத்துக்கு எங்களுடைய வாழ்த்துகள். ஜீ தமிழ் உடனான அவரது தொடர்பு நீடிக்கும்” என குறிப்பிட்டிருந்தது.
undefined
தற்போது கார்த்திக் நடித்து வந்த ஆதி கதாபாத்திரத்தில் தொகுப்பாளர் அக்னி நடித்து வருகிறார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரத்திரம் மக்கள் மனதில் எடுபடவில்லை என்பது போன்ற கருத்துகள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
undefined
இதனால் அக்கினியை நீக்கி விட்டு மீண்டும் கார்த்தியை நடிக்கவைக்க, சீரியல் தரப்பை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு வந்தந்தி பரவியது.
undefined
இந்நிலையில் இது குறித்து, சீரியல் குழுவை சேர்ந்தவர்களை விசாரித்த போது, இந்த தகவல் முற்றிலும் வதந்தி மட்டுமே என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது சீரியல் நன்றாகவே சென்று கொண்டிருப்பதால் அக்னியே தொடர்ந்து ஹீரோவாக நடிப்பார் என கூறி இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
undefined
click me!