Published : Oct 08, 2024, 03:19 PM ISTUpdated : Oct 08, 2024, 03:31 PM IST
நடிகரும் - தயாரிப்பாளருமான கே.சி.பிரபாத் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஆர்கே சுரேஷ் நடிப்பில், 2018-ஆம் ஆண்டு வெளியான பில்லா பாண்டி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே சி பிரபாத். இந்த படத்தில் முரட்டு வில்லனாகவும் நடித்திருந்தார். இவர் நடித்த வில்லன் ரோலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரன், போன்ற பல படங்களில் முக்கிய வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.
24
KC Prabhat
இந்நிலையில், கே.சி.பிரபாத் நடித்து வரும் 'யாமம்' என்கிற திரைப்படத்தில் இவர் நடித்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக படப்பிடிப்பிலேயே மயங்கி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பிரபாத்தை, பட குழுவினர் அருகே இருந்த சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
44
Karuppu Petti is Upcoming Movie
கடந்த சில வாரங்களாகவே இரவு, படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்ததன் அழுத்தம் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் நடித்து முடித்துள்ள 'கருப்பு பெட்டி' என்கிற திரைப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பிரபாத்தின் உடல்நிலை நலம் பெற ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.