எம்புரான் பட வில்லன் அபிமன்யு சிங் பேட்டி
குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவரின் பெயரை வில்லனுக்கு வைத்ததால் அதை மாற்றக் கோரி எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பால்தேவ் என அந்த பெயரை மாற்றினர். இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை குறித்து அப்படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யு சிங் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : “சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். ஒரு நடிகரின் கடமை என்னவென்றால், அவர் அந்த படத்திற்கு தேவையானதை செய்வது தான். ஒரு வேகத்தில் நடிக்கிறோம். அதன் விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. எம்புரான் படத்திற்கு சிக்கல் வந்துள்ளதை அண்மையில் தான் அறிந்தேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் அதை விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.