டி.ராஜேந்தர் செய்த செயல்... 8 கோடி நஷ்டஈடு வழங்கிய தமிழக அரசு! ஏன் தெரியுமா?

Published : Jun 14, 2023, 10:26 PM ISTUpdated : Jun 14, 2023, 10:31 PM IST

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ள டி.ராஜேந்தருக்கு தமிழக அரசு சுமார் 8 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
15
டி.ராஜேந்தர் செய்த செயல்... 8 கோடி நஷ்டஈடு வழங்கிய தமிழக அரசு! ஏன் தெரியுமா?

கோலிவுட் திரையுலகில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் டி.ராஜேந்தர். தன்னுடைய திரைப்படங்களில் ரசிகர்களே மலைத்து போகும் அளவுக்கு  அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும். அதே போல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிம்புவின் தந்தையாவார்.

25

நடிப்பை தாண்டி அரசியலிலும் களம் கண்டவர் டி.ராஜேந்தர். ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவங்கிய இவர், பின்னர் திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். பின்னர் 1996 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவிலிருந்து விலகி 1991 இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்று கட்சியையும் 2004 இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக... திருவண்ணாமலையில் வேண்டுதல் வைத்த தாடி பாலாஜி!

35
t rajendhar

கலையுலகில் சம்பாதித்த பணத்தை, பல்வேறு தோழிகளிலும் இவர் முதலீடு செய்துள்ளார். அதில் முக்கியமாக இவருக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சொந்த திரையரங்கங்களும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், டி. ராஜேந்தருக்கு சொந்தமாக வேலூரில் திரையரங்கம் ஒன்று இயக்கி வந்தது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடத்தில் இந்த திரையரங்கம் செயல்பட்டு வந்ததால்,  அப்பகுதி மக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டனர்.

45
Film Theater

மேலும் மேம்பாலம் அமைத்து கொடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில், மேம்பாலம் கட்ட டி. ராஜேந்தரின் திரையரங்கம் இருக்கும் இடம் தேவைப்பட்டது. 

18 வயதில் காதல்! அந்த விஷயத்துக்கு ஓகே.. பட் இந்த இரண்டும் வேண்டாம்! காதலருக்கு கண்டீஷன் போட்ட பிரியா பவானி!

55

இது தொடர்பாக அவருக்கு தமிழக அரசு சார்பில் நோட்டீஸும் அனுப்பிய நிலையில்,  இதையடுத்து டி. ராஜேந்தர் வேலூர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்று, தன்னுடைய திரையரங்கம் அமைந்திருந்த 527 சதுர மீட்டர் நிலத்தை, மேம்பாலம் கட்ட கிரயம் செய்து கொடுத்தார். இதற்காக அரசு சார்பில் அவருக்கு 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories