ஒரு மாதத்திற்கு பிறகு நடந்த லாஸ்லியா தந்தையின் இறுதிச்சடங்கு... கண்கலங்க வைக்கும் கடைசி புகைப்படங்கள்...!

First Published Dec 13, 2020, 6:43 PM IST

பல கட்ட போராட்டங்களுப் பிறகு லாஸ்லியாவின் தந்தையின் உடல் இலங்கை வந்தடைந்துள்ளது. 

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
undefined
லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனநாடாவில் வேலை பார்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாஸ்லியாவை பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
undefined
அப்போது கவினுடனான காதல் விவகாரத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை கோபமடைந்ததும், அவரை சமாதானப்படுத்துவதற்காக லாஸ்லியா கட்டியணைத்து கதறி அழுததையும் யாராலும் எளிதில் மறந்திருக்க முடியாது.
undefined
இந்நிலையில் கடந்த நவம்பர் 15ம் தேதி லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மரணமடைந்த செய்தி வெளியானது. இதனால் லாஸ்லியாவின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
undefined
அதுமட்டுமின்றி படுக்கையில் அவர் சடலமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் தீயாய் பரவ, மரியநேசன் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவியது.
undefined
ஆனால் கனடா அரசாங்கம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் அவர் இயற்கையான முறையிலேயே இறந்ததாகவும், உறக்கத்திலேயே மரியநேசனின் உயிர் பிரிந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
undefined
பல கட்ட போராட்டங்களுப் பிறகு லாஸ்லியாவின் தந்தையின் உடல் இலங்கை வந்தடைந்துள்ளது. சவப்பெட்டிக்குள் சடலமாக இருக்கும் மரியநேசனின் புகைப்படங்களை லாஸ்லியாவின் ரசிகர்கள் கனத்த இதயத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
undefined
தனது தந்தை மிகவும் நேசிக்கும் லாஸ்லியாவும் அவருடைய குடும்பமும் இந்த மிகப்பெரிய சோகத்தில் இருந்து மீண்டு வர வேண்டுமென ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
undefined
தற்போது தன்னுடைய கைவசம் ஹர்பஜன் உடன் பிரெண்ட்ஷிப், ஆரியுடன் ஒரு படம், புதுமுக நடிகருடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களை வைத்துள்ள லாஸ்லியா. இன்னும் சில வாரங்களுக்குப் பிறகே ஷூட்டிங்கில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
click me!