இந்நிலையில், மாணவர்களின் ஆவலோடு காத்திருந்த பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி (02.06.2025), திங்கட்கிழமை அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.