Scholarship இங்கிலாந்தில் படிக்க நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகம் வழங்கும் ரூ.16 லட்சம் கல்வி உதவித்தொகை. தகுதிகள் மற்றும் கடைசி தேதிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
உயர்கல்விக்காக இங்கிலாந்து செல்ல விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகம் (Nottingham Trent University - NTU), 2026-ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) மாணவர்களுக்குப் பிரம்மாண்டமான கல்வி உதவித்தொகைத் திட்டங்களை அறிவித்துள்ளது. கல்வி ரீதியாகச் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சுமார் £15,350 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16 லட்சத்திற்கும் மேல்) வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
25
யாருக்கெல்லாம் இந்த உதவித்தொகை கிடைக்கும்?
இந்த உதவித்தொகையைப் பெற விரும்பும் இந்திய மாணவர்கள், முதலில் நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு தகுதியான பாடப்பிரிவில் சேர அனுமதி (Offer Letter) பெற்றிருக்க வேண்டும். மேலும், அவர்கள் சர்வதேச மாணவர் பிரிவின் கீழ் விண்ணப்பித்திருக்க வேண்டும். 2026 ஜனவரி அல்லது செப்டம்பர் மாதங்களில் படிப்பைத் தொடங்கும் புதிய மாணவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
35
உதவித்தொகை விவரங்கள்: இளங்கலை மற்றும் முதுகலை
• இளங்கலை (Undergraduate): முதல் ஆண்டு கல்விக்கட்டணத்தில் 50% அல்லது 25% தள்ளுபடி பெறலாம். அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு £3,000 தள்ளுபடி வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக ஒரு மாணவர் தனது பட்டப்படிப்பு காலத்தில் அதிகபட்சமாக £15,350 வரை சேமிக்க முடியும்.
• முதுகலை (Postgraduate): முதுகலை மாணவர்களுக்குப் பாடப்பிரிவைப் பொறுத்து £2,000 முதல் £12,500 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தக் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் மூன்று சுற்றுகளாகப் பரிசீலிக்கப்படும். மாணவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிப்பது விசா நடைமுறைகளுக்கு வசதியாக இருக்கும் எனப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
• முதல் சுற்று காலக்கெடு: 25 மார்ச் 2026
• இரண்டாம் சுற்று காலக்கெடு: 22 ஏப்ரல் 2026
• மூன்றாம் சுற்று காலக்கெடு: 24 ஜூன் 2026
55
தேர்வு செய்யப்படும் முறை
மாணவர்களின் கல்வித் தரம் (Academic Performance), தலைமைப்பண்பு (Leadership Potential) மற்றும் பல்கலைக்கழக சமூகத்திற்கு அவர்கள் வழங்கக்கூடிய பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகைத் தொகை நேரடியாக மாணவர்களின் கல்விக்கட்டணத்தில் இருந்து கழிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற இந்திய மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.