ரூ.6.5 லட்சம் சம்பளம்.. 1,300 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வங்கி வேலை வாய்ப்பு

Published : Mar 16, 2026, 01:19 PM IST

ஐடிபிஐ வங்கி 2026-ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு, நாடு முழுவதும் 1,300 அதிகாரி பணியிடங்களை நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மார்ச் 19-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

PREV
15
வங்கித் துறையில் புதிய வேலை வாய்ப்பு

வங்கித் துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. ஐடிபிஐ வங்கி 2026 ஆம் ஆண்டிற்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளில் அதிகாரி பதவிகள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக ஜூனியர் உதவியாளர் மேனேஜர் பதவிக்கு அதிக எண்ணிக்கையிலான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வேலை வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

25
மொத்த காலிப்பணியிடங்கள் மற்றும் விண்ணப்ப தேதி

வங்கி தகவலின்படி மொத்தம் 1,300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப செயல்முறை மார்ச் 8 முதல் மார்ச் 19 வரை நடைபெறும். எனவே ஆர்வமுள்ளவர்கள் காலக்கெடு முடிவதற்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிப்பது அவசியம்.

35
எந்த பதவிகள்? சம்பளம் எவ்வளவு?

இந்த ஆட்சேர்ப்பில் இரண்டு முக்கிய பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அசிஸ்டென்ட் மேனேஜர் (கிரேடு A) – 200 இடங்கள்

ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் (கிரேடு O) – 1,100 இடங்கள்

ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வருடத்திற்கு சுமார் ரூ.6.14 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

45
தகுதி மற்றும் வயது வரம்பு

ஜூனியர் உதவியாளர் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண், SC/ST பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணினி அறிவும் இருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 25 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

55
விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் ஐடிபிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் புகைப்படம், கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை மற்றும் கையால் எழுதப்பட்ட உறுதிமொழி ஆகியவை அடங்கும். இறுதியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories