Bank Jobs: டிகிரியுடன், உள்ளூர் மொழி தெரியுமா? அப்படின்னா, பொதுத்துறை வங்கியில் வேலை கன்பார்ம்.!

Published : Nov 27, 2025, 07:01 AM IST

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. டிகிரி முடித்து, உள்ளூர் மொழி அறிவு (தமிழ்) உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

PREV
12
உள்ளூர் மொழி தெரியுமா? அப்ப வேலை கன்பார்ம்

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), Local Bank Officer பணியிடங்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது. டிகிரி முடித்தவர்கள் எளிதாக விண்ணப்பிக்கக்கூடிய இந்த வேலைவாய்ப்பு, மாநில வாரியான உள்ளூர்மொழித் திறனுக்கு முன்னுரிமை வழங்குவதால், குறிப்பாக தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்போருக்கு தமிழ் மொழி அறிவு ஒரு முக்கிய நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 750 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பொதுப்பிரிவு – 336, OBC – 194, EWS – 67, SC – 104, ST – 49 என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 17 மாநிலங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிக காலியிடங்கள் மகாராஷ்டிரா (135), குஜராத் (95), தெலுங்கானா (88), அசாம் (86), கர்நாடகா (85) மற்றும் தமிழ்நாடு (85) ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் திறமை வேண்டும். 10ஆம் வகுப்பில் அந்த மாநில மொழியை படித்திருந்தால், தனியாக மொழித் தேர்வு எழுத வேண்டியதில்லை. இல்லை என்றால், மொழித் திறன் தேர்வு கட்டாயமாகும். 

22
உடனே விண்ணப்பிக்கனும் மக்களே.!

வயது வரம்பு: ஜூலை 1 அடிப்படையில் 20–30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC-க்கு 3 ஆண்டுகள் மற்றும் SC/ST-க்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை

  • 4 கட்டங்களில் தேர்வு நடைபெறும்
  • ஆன்லைன் எழுத்துத்தேர்வு (150 மதிப்பெண்கள்)
  • நேர்முகத் தேர்வு (50 மதிப்பெண்கள்)
  • உள்ளூர்மொழித் திறன் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

எழுத்துத் தேர்வில் ரீசனிங், பொது அறிவு, கம்ப்யூட்டர் அப்ட்டியூட் போன்றவை இடம்பெறும். நெகட்டிவ் மார்க் உண்டு. நேர்முகத்தில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற வேண்டும் (SC/ST – 22.5).

விண்ணப்பிக்கும் முறை: முழுக்க ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கடைசி நாள் – டிசம்பர் 1. தேர்வு டிசம்பர் அல்லது ஜனவரியில் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவுக்கு ₹1180 மற்றும் SC/ST பிரிவுக்கு ₹59.விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories