போலி ஏஜெண்டுகளின் பிடியில் சிக்கினால்...
பதிவு செய்யாத போலி ஏஜெண்டுகளை நம்பிச் சென்றால் பாலைவனத்தில் ஆடு, ஒட்டகம் மேய்க்கக் கட்டாயப்படுத்தப்படலாம். அல்லது 40 முதல் 50 அறைகள் கொண்ட பெரிய வீடுகளில் ஓய்வின்றி வீட்டு வேலை செய்யவும், கழிவறை சுத்தம் செய்யவும் வற்புறுத்தப்படுவார்கள். பாஸ்போர்ட்டைப் பறித்துக்கொண்டு, சம்பளம் தராமல் கொத்தடிமைகளாக நடத்தும் அபாயமும் உள்ளது. சில நேரங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கும் ஆளாக நேரிடலாம்.
அவசர உதவிக்கு யாரை அழைக்க வேண்டும்?
வெளிநாட்டு வேலை குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்குத் தமிழ்நாடு அரசின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்:
• இந்தியாவிற்குள்: 1800 309 3793
• வெளிநாடுகளிலிருந்து: 0 80 6900 9900
• மிஸ்டு கால் (Missed Call): 0 80 6900 9901
• இணையதளம்: https://nrtamils.tn.gov.in/