இதற்கிடையே சார் பதிவாளர், இளநிலைவேலைவாய்ப்பு அலுவலர், வனவர் பதவிகள் அடங்கிய குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்ப கடந்த 5.07.2025 அன்று டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிக்கை வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 28.09.2025 அன்று நடைபெற்றது. இந்த தேர்வை 4,20,217 தேர்வர்கள் எழுதினர்.
முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு
இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருந்த நிலையில், இன்று (டிசம்பர் 22) குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வில் மொத்தம் 10,583 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் குரூப் 2 முதல்நிலை தேர்வில் 1,126 பேரும், குரூப் 2ஏ முதல் நிலை தேர்வில் 9,457 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.