உலகப்புகழ் பெற்ற Zoho நிறுவனம், தனது தஞ்சாவூர். மதுரை கிளைகளுக்கு Technical Writer மற்றும் PR Executive பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. பட்டப்படிப்புடன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் புதியவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உலகப்புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனமான ஸோஹோ (Zoho), தனது கிளைகளைத் தமிழகத்தின் முக்கிய நகரங்களான தஞ்சாவூர் மற்றும் மதுரைக்கு விரிவுபடுத்தி வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் தங்கள் ஊரை விட்டு வெளியேறாமல், சிறந்த பணிச்சூழலில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
25
பணியின் தன்மை மற்றும் பொறுப்புகள்
தற்போது இந்த கிளைகளில் Technical Writer மற்றும் PR Executive ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. தொழில்நுட்ப எழுத்தாளர்கள், கடினமான மென்பொருள் நுணுக்கங்களைச் சாமான்ய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய ஆங்கிலத்தில் விளக்கிக் கட்டுரைகளாக எழுத வேண்டும். அதேபோல், PR Executive பணியில் இருப்பவர்கள் நிறுவனத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள்.
35
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். குறிப்பாக 1 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருப்பினும், ஆங்கிலத்தில் தெளிவாக எழுதும் ஆற்றலும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைக்குத் தாராளமாக முயற்சி செய்யலாம்.
ஸோஹோ நிறுவனத்தைப் பொறுத்தவரை, சம்பளம் என்பது ஒருவரது தனிப்பட்ட திறமை மற்றும் முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பொதுவாக ஐடி துறையில் வழங்கப்படும் சிறப்பான ஊதியத்துடன், இலவச உணவு மற்றும் போக்குவரத்து போன்ற கூடுதல் சலுகைகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது. உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் நிறுவனம் என்பதால், அமைதியான மற்றும் தரமான பணிச்சூழல் ஊழியர்களுக்குக் கிடைக்கும்.
55
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஸோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான careers.zoho.com என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உங்கள் சுயவிவரக் குறிப்பில் (Resume) உங்கள் திறமைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிப்பது தேர்வாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.