இந்த மோசடி கும்பல் மிகவும் திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. விசாரணையின்போது, இவர்களது செயல்பாடுகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பத்தில் இந்திய ரயில்வேயில் வேலை தருவதாகத் தொடங்கிய இந்த மோசடி, பின்னர் வனத்துறை, வருமான வரித்துறை, அஞ்சல் துறை, பொதுப்பணித்துறை (PWD) மற்றும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) என 40-க்கும் மேற்பட்ட அரசு அமைப்புகளின் பெயரில் விரிவடைந்துள்ளது.
அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகளைப் போன்றே போலி ஐடிகளை உருவாக்கி, அதன் மூலம் பணி நியமனக் கடிதங்களை அனுப்பி இளைஞர்களை நம்ப வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமனக் கடிதம் கொடுத்து, அவர்கள் வேலையில் சேர்ந்துவிட்டது போன்ற பிம்பத்தை உருவாக்க, 2 முதல் 3 மாதங்களுக்குச் சம்பளம் வழங்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் இது உண்மையான வேலைதான் என்று முழுமையாக நம்பி ஏமாந்துள்ளனர்.
ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), டிக்கெட் பரிசோதகர் (TTE) மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பதவிகளில் இவர்கள் போலிப் பணி நியமனம் செய்துள்ளனர்.