UPSC நேர்முகத் தேர்வு என்பது வெறும் பாடப்புத்தக அறிவை மட்டும் சோதிப்பது அல்ல; அது ஒருவரின் சமயோசித புத்தி, தர்க்கரீதியான சிந்தனையைச் சோதிக்கும் களமாகும். சமீபத்தில் UPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட சுவாரசியமான 5 கேள்விகளை இங்கே பார்ப்போம்.
ஹிந்தியில் 'வாய்ப்பாடு' (Multiplication Tables)-க்கு என்ன பெயர்?
பதில்: ஹிந்தியில் வாய்ப்பாட்டிற்கு 'பஹாடா' (Pahada) என்று பெயர். குழந்தைகளுக்கு வாய்ப்பாட்டை வெறும் மனப்பாடம் செய்ய வைக்காமல், பெருக்கல் மற்றும் கூட்டல் முறையை அவர்களுக்குப் புரிய வைப்பதன் மூலம், அவர்கள் ஒருவேளை மறந்தாலும் அவர்களாகவே வாய்ப்பாட்டை உருவாக்க முடியும்.
25
ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
பதில்: இந்தியாவில் ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கும் அதிகாரம் அந்தந்த மாநில அரசிற்கு (State Government) உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நிர்வாக வசதி ஆகிய காரணங்களுக்காக மாநில அரசு தனது நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி புதிய மாவட்டங்களை அறிவிக்கலாம்.
35
மருதாணி வைத்தால் கைகள் ஏன் சிவப்பாக மாறுகிறது?
பதில்: மருதாணி இலைகளில் 'லாசோன்' (Lawsone) என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. இது நமது தோலில் உள்ள 'கெரட்டின்' (Keratin) என்ற புரோட்டீனுடன் வினைபுரிவதால் கைகளில் சிவப்பு-பழுப்பு நிறம் உண்டாகிறது.
'புவிசார் குறியீடு' (GI Tag) என்றால் என்ன? அது ஏன் வழங்கப்படுகிறது?
பதில்: GI என்பது Geographical Indication என்பதன் சுருக்கம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளையும் அல்லது தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பொருட்களுக்கு (உதாரணமாக: திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு) அதன் அங்கீகாரத்தைப் பாதுகாக்கவும், போலிகளைத் தடுக்கவும் இந்தக் குறியீடு வழங்கப்படுகிறது.
55
'Jungle' மற்றும் 'Forest' - இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
பதில்:
• Forest (காடு): இது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இது சில நேரங்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது நடப்பட்ட மரங்களைக் கூட கொண்டிருக்கலாம்.
• Jungle (வனம்): இது காட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் இது இயற்கையாக வளர்ந்த, மிகவும் அடர்த்தியான மற்றும் மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதியைக் குறிக்கும்.