2026 பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக, சிபிஎஸ்இ (CBSE) தனது வருடாந்திர இலவச உளவியல் ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. தேர்வு மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை வளர்க்க இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எவ்வித மன அழுத்தமுமின்றி எதிர்கொள்ள உதவும் வகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது வருடாந்திர இலவச 'உளவியல்-சமூக ஆலோசனை' (Psycho-Social Counselling) சேவையைத் தொடங்கியுள்ளது.
இந்தச் சேவை ஜனவரி 6, 2026 முதல் ஜூன் 1, 2026 வரை தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உதவி பெற 3 முக்கிய வழிகள் உள்ளன.
24
24/7 கட்டணமில்லா தொலைபேசி (IVRS)
ஆலோசனை பெறுவதற்கான உதவி எண்: 1800-11-8004
இந்த எண்ணைத் தொடர்புகொண்டு 24 மணிநேரமும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஆலோசனைகளைப் பெறலாம்.
இதில் தேர்வுக்கான தயாரிப்பு முறைகள், நேர மேலாண்மை மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் தானியங்கி முறையில் (IVRS) வழங்கப்படும்.
34
நேரடி டெலி-கவுன்சிலிங் (Tele-counselling)
நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 73 பயிற்சி பெற்ற நிபுணர்களுடன் (பள்ளி முதல்வர்கள், உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள்) நேரடியாகப் பேசி மனநல ஆதரவைப் பெறலாம். இதில் 61 நிபுணர்கள் இந்தியாவிலும், 12 பேர் வெளிநாடுகளிலும் (நேபாளம், ஜப்பான், கத்தார் போன்றவை) இருந்து பணியாற்றுகின்றனர்.
சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cbse.gov.in-இல் மன அழுத்தத்தைக் கையாளுதல் மற்றும் படிப்பு உத்திகள் குறித்த எளிமையான தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
தேர்வு நெருங்கும் நேரத்தில் பதற்றத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை வளர்க்க இந்தச் சேவையைப் பயன்படுத்துமாறு மாணவர்களையும் பெற்றோர்களையும் சிபிஎஸ்இ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக, 'ஷிக்ஷா வாணி' (CBSE Shiksha Vani) செயலி மூலமாகவும் மாணவர்கள் ஆலோசனைகளைக் கேட்கலாம்.