தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆண்டுதோறும் அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான TNPSC தேர்வு அட்டவணைப்படி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் - நிலை 2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 645 பணிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி II/IIA தேர்வுக்கான அறிவிக்கை 2025 ஜூலை 15 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஒரு சிறந்த திட்டத்தை அறிவித்துள்ளது.
25
திருநெல்வேலி வேலைவாய்ப்பு மையத்தில் தரமான பயிற்சி!
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், TNPSC குரூப் II/IIA தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 2025 ஜூலை 21 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இப் பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு ஸ்மார்ட் போர்டு வசதியுடன் நடத்தப்படுகிறது. மேலும், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும், மாநில அளவிலான முழு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.
35
நூலக வசதியுடன் சுயபயிற்சிக்கு வழி!
TNPSC, TNUSRB, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாகப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் படிப்பு அரங்கு (study hall) வசதியும் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகளை [https://tamilnaducareerservices.tn.gov.in/] என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்களைப் பெற, NELLAI EMPLOYMENT OFFICE என்ற டெலிகிராம் சேனலில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 2025 ஜூலை 21 அன்று காலை 10.30 மணிக்கு, 17C, சிதம்பரம் நகர், பெருமாள்புரம் C காலனியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
55
மேலும் தகவல்களுக்கு
மேலும் தகவல்களுக்கு 0462-2902248 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.