Internship Apply : DRDO-வில் இன்டர்ன்ஷிப்.. மாணவர்களுக்கு ரூ.30,000 உதவித்தொகை!

Published : May 17, 2026, 11:12 AM IST

DRDO Internship 2026 : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO, மாணவர்களுக்காக புதிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பை அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.30,000 வரை உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

PREV
12
DRDO-வில் இன்டர்ன்ஷிப்

இன்றைய போட்டி உலகில் வெறும் டிகிரி மட்டும் போதுமானதாக இல்லை. நிறுவனங்கள் அனுபவமும் திறமையும் கொண்ட இளைஞர்களை தேடுகின்றன. இந்த சூழலில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ மாணவர்களுக்காக முக்கியமான இன்டர்ன்ஷிப் வாய்ப்பை அறிவித்துள்ளது.

எந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம்?

பெங்களூருவில் செயல்படும் டிஆர்டிஓ-வின் DEBEL ஆய்வகத்தில் இந்த இன்டர்ன்ஷிப் நடைபெறுகிறது. UGC அல்லது AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பொறியியல் அல்லது அறிவியல் பிரிவில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தகுதிகள்:

  • பொறியியல் / அறிவியல் மாணவர்கள் மட்டும்
  • அங்கீகாரம் பெற்ற கல்லூரி அவசியம்
  • முழுமையான விண்ணப்பம் கட்டாயம்
  • மெரிட் அடிப்படையில் தேர்வு
  • ரூ.30,000 வரை உதவித்தொகை.

ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு

22
மாணவர்களுக்கு சூப்பர் அப்டேட்

இந்த இன்டர்ன்ஷிப் சுமார் 6 மாதங்கள் நடைபெறும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.30,000 உதவித்தொகை வழங்கப்படும். முதல் 3 மாதங்கள் முடிந்தது ரூ.15,000 மற்றும் இறுதியில் மற்ற தொகை வழங்கப்படும்.

மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:

  • நடைமுறை பயிற்சி
  • ஆராய்ச்சி அனுபவம்
  • டிஆர்டிஓ வெளிப்பாடு
  • தொழில் வளர்ச்சி வாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை என்ன?

இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து தேவையான விவரங்களை நிரப்பி, மார்க் ஷீட் மற்றும் கல்லூரி அனுமதி கடிதத்துடன் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குனர், DEBEL, டிஆர்டிஓ, ADE வளாகம், புதிய திப்பசந்திரா, பெங்களூரு - 560075

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31, 2026
  • தேர்வு தகவல் வெளியீடு: ஜூன் 18, 2026
  • இன்டர்ன்ஷிப் தொடக்கம்: ஜூலை 1, 2026

எழுத்துத் தேர்வு எதுவும் நடத்தப்படாது என்பது மாணவர்களுக்கு கூடுதல் பலனாக பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி துறையில் எதிர்காலத்தை உருவாக்க நினைக்கும் மாணவர்களுக்கு இது முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories