Railway Jobs : ரயில்வேயில் 11,127 வேலை வாய்ப்புகள்.. அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி.. முழு விபரம்!

Published : May 12, 2026, 03:16 PM IST

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ALP) பதவிக்கு 11,127 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒரு பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்.

PREV
15
11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் வேலை கிடைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ஏஎல்பி) பணியிடங்களுக்கு மிகப்பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11,127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, நாடு முழுவதும் ரயில்வே தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களிடையே அதிக உற்சாகம் உருவாகியுள்ளது. குறிப்பாக அரசு வேலைக்காக முயற்சி செய்து வரும் டிப்ளமோ, ஐடிஐ மற்றும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு இது முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

25
மத்திய அரசு வேலை வாய்ப்பு

அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 15 முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 14 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறையில் நிரந்தர வேலை, நல்ல சம்பளம் மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு இருப்பதால் இந்த ஆட்சேர்ப்புக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
ரயில்வே வேலைவாய்ப்பு

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு ஐடிஐ முடித்திருக்க வேண்டும். குறிப்பாக ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். மேலும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படுகிறது.

45
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு

உதவி லோகோ பைலட் தேர்வு முறை பல கட்டங்களாக நடைபெறும். முதலில் CBT-1 என்ற கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். அதன்பின் CBT-2 தேர்வு, தொடர்ந்து CBAT எனப்படும் aptitude test நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள். குறிப்பாக லோகோ பைலட் பணிக்கான கண் பார்வை A-1 தரத்தில் இருக்க வேண்டும் என்பதால் மருத்துவ பரிசோதனை மிகவும் முக்கியமானது.

55
ஆன்லைன் விண்ணப்பம்

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.19,900 வழங்கப்படும். இதனுடன் DA, HRA, Running Allowance உள்ளிட்ட பல்வேறு அலவன்ஸ்கள் சேர்த்து மாதம் ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதனால் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை முன்கூட்டியே புரிந்து கொண்டு தயாராக ஆரம்பித்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories