8th Pay Commission: 8-வது ஊதியக் குழுவில் ரூ.1 கோடி இன்சூரன்ஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Published : Sep 18, 2026, 04:03 PM IST

8-வது ஊதியக் குழுவிடம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.1 கோடி இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த திட்டம் என்ன, யாருக்கு என்ன லாபம் என்பதை 10 பாயிண்ட்களில் பார்க்கலாம்.

PREV
110
புதிய கோரிக்கை

மத்திய அரசு ஊழியர்கள் 8-வது ஊதியக் குழுவிடம் அடுத்தடுத்து பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அடிப்படை சம்பளம், ஃபிட்மென்ட் ஃபேக்டர், வீட்டு வாடகைப்படியைத் தொடர்ந்து, இப்போது இன்சூரன்ஸ் கவரேஜை அதிகரிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

210
ரூ.1 கோடி இன்சூரன்ஸ்

இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றால், குரூப்-சி ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் கவரேஜ் ரூ.1 கோடியாக உயரும். அதேபோல, குரூப்-பி மற்றும் குரூப்-ஏ ஊழியர்களுக்கும் அதிக இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

310
எந்த திட்டத்தின் கீழ்?

மத்திய அரசு ஊழியர்களுக்காக 'சென்ட்ரல் கவர்ன்மென்ட் எம்ப்ளாயீஸ் குரூப் இன்சூரன்ஸ் ஸ்கீம்' (CGEGIS) என்ற திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தில் ஊழியர்கள் சேமிப்பு வசதியோடு சேர்த்து இன்சூரன்ஸ் பாதுகாப்பையும் பெறுகிறார்கள்.

410
ஏன் இந்த கோரிக்கை?

பல ஆண்டுகளாக இந்த இன்சூரன்ஸ் தொகையை அரசு கொஞ்சம் கூட உயர்த்தவில்லை என ஊழியர் சங்கங்கள் கூறுகின்றன. ஆனால், இந்த காலகட்டத்தில் பொருட்களின் விலையும் வாழ்க்கைச் செலவும் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

510
10 மடங்கு உயர்வு

பழைய இன்சூரன்ஸ் தொகையை வைத்துக்கொண்டு இப்போதைய தேவைகளை சமாளிக்க முடியாது என சங்கங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. அதனால், தற்போதைய கவரேஜை குறைந்தபட்சம் 10 மடங்கு உயர்த்த வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்.

610
FNPO-வின் கோரிக்கை

ஃபெடரேஷன் ஆஃப் நேஷனல் போஸ்டல் ஆர்கனைசேஷன் (FNPO) அமைப்பு, ஊழியர்களின் இன்சூரன்ஸ் கவரேஜ் குறித்து 8-வது ஊதியக் குழுவிடம் ஒரு தெளிவான திட்டத்தை முன்வைத்துள்ளது. ஒவ்வொரு குரூப் ஊழியர்களுக்கும் தனித்தனி கோரிக்கைகளை அவர்கள் கொடுத்துள்ளனர்.

710
யாருக்கு எவ்வளவு?

குரூப்-சி ஊழியர்களுக்கு ரூ.1 கோடி கவரேஜ் (மாத சந்தா ரூ.1,000). குரூப்-பி ஊழியர்களுக்கு ரூ.1.5 கோடி கவரேஜ் (சந்தா ரூ.1,500). குரூப்-ஏ ஊழியர்களுக்கு ரூ.3 கோடி கவரேஜ் (மாத சந்தா ரூ.3,000) வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

810
வெறும் ரூ.1.5 லட்சம்

பல தசாப்தங்களாக இன்சூரன்ஸ் கவரேஜ் தொகை ஒரே அளவில்தான் இருக்கிறது என FNPO சுட்டிக்காட்டியுள்ளது. உதாரணமாக, குரூப்-சி ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் கவரேஜ் இப்போதும் வெறும் 1.5 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

910
மாற்றுத் திட்டம்

7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த மாற்றுத் திட்டத்தை அமல்படுத்தினால், குரூப்-சி, பி மற்றும் ஏ ஊழியர்களுக்கு முறையே 15 லட்சம், 25 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாய் கவரேஜ் கிடைக்கும். மேலும், இன்சூரன்ஸ் மற்றும் சேமிப்பு விகிதத்தை 3:7 என்பதில் இருந்து 70:30 ஆக மாற்றவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

1010
DA உயர்ந்தால்...

அகவிலைப்படி (DA) 50 சதவீதத்தைத் தாண்டினால், இன்சூரன்ஸ் கவரேஜையும் 25 சதவீதம் உயர்த்த வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுள்ளது. ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே 8-வது ஊதியக் குழுவிடம் இந்த கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories