
ஒரு நிலத்திற்கோ அல்லது வீட்டிற்கோ முக்கியமான பத்திரம் எதுவென்றால் அது தாய் பத்திரமே. தாய் பத்திரம் (Parent Document) என்பது ஒரு வீட்டிற்கோ, நிலத்திற்கோ உரிமை நிரூபிக்கும் முக்கியமான ஆவணம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இது இல்லாமல் சொத்து உரிமையை நிரூபிக்க இயலாத சூழ்நிலை உருவாகக்கூடும். எனவே, இது மிகவும் முக்கியமான தவறவிடக் கூடாத ஆவணங்களில் ஒன்றாகும் . ஆனால் சில நேரங்களில் நாம் கவனக்குறைவால் அல்லது எதிர்பாராத விதமாக அந்த ஆவணத்தை இழக்க நேரிடலாம். அந்நிலையில் அச்சத்தைவிட சட்டப்படி செய்ய வேண்டிய சில செயல்முறைகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து நீங்கள் உங்கள் சொத்து உரிமையை பாதுகாக்கலாம்.
முக்கியமான தாய் பத்திரம் காணாமல் போனாலோ, தொலைந்தாலோ நாம் சில விஷயங்களை கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். தாய் பத்திரம் தொலைந்தது முதலில் எங்கு நடந்தது (உங்கள் வீடு, அலுவலகம், பயணத்தின்போது) என்பதை நினைவில் கொண்டு, அந்த இடத்திற்கு உரிய நெருங்கிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டியது கட்டாயம். புகாரில் பத்திரத்தின் விவரங்கள் (பதிவுத் தேதி, பத்திர எண், பதிவு அலுவலகம், சொத்து விவரம்) போன்றவை மிக முக்கியம்.
இது ஒரு (Lost Document) புகார் ஆகும். போலீசாரிடம் First Information Report (FIR) பெறுவது நல்லது. சில நேரங்களில் அவர்கள் Non-Traceable Certificate அதாவது பத்திரம் கிடைக்க முடியவில்லை என்ற சான்றிதழையும் தருவார்கள்.
போலீஸ் புகாருக்குப் பிறகு, உங்கள் குடும்ப வழக்குரைஞரிடம் அனைத்து ஆவணங்களையும் (FIR, Non-traceable certificate) கொண்டு செல்லவும். வழக்குரைஞர் இப்போது கீழ்காணும் இரண்டு முக்கியமான செயல்களை மேற்கொள்வார்:
பத்திரிகை விளம்பரம் (Newspaper Advertisement)
வழக்குரைஞர் உங்கள் சார்பில் இரண்டு பத்திரிகைகளில், அதாவது ஒன்று தமிழ் பத்திரிகை மற்றொன்று ஆங்கில பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதில், அந்த பத்திரம் காணவில்லை என்பதை அறிவித்து, யாரேனும் அதை கண்டெடுத்தால் குறிப்பிட்ட நேரக்காலத்தில் (பொதுவாக 15 நாட்கள்) ஒப்படைக்குமாறு அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த அறிவிப்பு சட்டபூர்வமாக எதிர்காலத்தில் அந்த பத்திரம் மீது யாரும் உரிமை கூற முடியாத வகையில் பாதுகாப்பாக இருக்கும்.
சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து நகல் பெறுதல்
விளம்பரத்திற்குப் பிறகு அந்த பத்திரம் மீண்டும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் சொத்து பதிவு செய்யப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று Certified Copy of Parent Document (தாய் பத்திரத்தின் அங்கீகரிக்கப்பட்ட நகல்) பெறலாம். இது அதிகாரப்பூர்வமாக அசல்பத்திரத்துக்கே சமமாக கருதப்படும்.
இந்த அனைத்து செயல்முறைகளுக்குப் பிறகு, உங்கள் வழக்குரைஞர் ஒரு “Document Lost – Legal Possession Certificate” என்ற சட்ட சான்றிதழ் வழங்குவார். இதன் மூலம் நீங்கள் உங்கள் சொத்தை தொடர்ந்து அனுபவிக்கலாம். வங்கிகளில் கடன் வாங்கும்போதோ, சொத்து விற்பனை செய்யும்போதோ இது ஆதாரமாக இருக்கும்.
சொத்து காலி நிலமாக இருந்தால் மேலும் ஒரு எச்சரிக்கை
நீங்கள் நிரந்தரமாக அனுபவித்து வரும் சொத்து ஒரு காலி நிலமாக இருந்தால், எதிர்காலத்தில் உரிமை பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, உங்கள் மனைவி, மகன், மகள் ஆகியோரின் பெயரில் ஒரு Settlement Deed (தானசெட்டில்மென்ட் பத்திரம்) செய்து வைத்து விடுவது நல்லது. இது வரும் தலைமுறைக்கும் சொத்து உரிமை பாதுகாப்பை உறுதி செய்யும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது
முக்கியம் மிகவும் முக்கியம்
தாய் பத்திரம் தொலைந்துவிட்டால் பயப்பட வேண்டியதில்லை. சட்டப்படி சரியான வழியில் செயல்பட்டால், உங்கள் சொத்திற்கான உரிமைத் தடங்கலின்றி பாதுகாக்கலாம். வழக்குரைஞரின் உதவியுடன் பத்திர நகலை மீட்டெடுத்து, சட்ட சான்றிதழ் மூலம் உங்கள் சொத்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யலாம். சொத்து எப்போதும் பாதுகாப்புடன் இருந்தாலே நிம்மதியான வாழ்க்கை அமைவதில்லை — அதற்கான ஆவணங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!