மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து நடந்த அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநர் ரோஹித் ராஜ் இதுபற்றி விளக்கினார். முந்தைய விலை உச்சவரம்பு முறையை மாற்றி, இந்த புதிய விலை முறைக்கு அரசு எப்படி வந்தது என்பதை அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.
"நேற்றைய தினம் 60.5, 75.62, 104, 142 என சில நம்பர்கள் பரவியது. அமைச்சரவை முடிவுக்குப் பிறகு இந்த வெவ்வேறு விலைகள் எப்படி வந்தன என்பதை நான் விளக்குகிறேன்" என்று ராஜ் பேசத் தொடங்கினார். அவர் சொன்னபடி, மார்ச் 1, 2026 அன்று, விமான எரிபொருளின் அடிப்படை விலை லிட்டருக்கு ரூ.60.5 ஆக இருந்தது. இது மேற்கு ஆசியப் பிரச்சினை காரணமாக எரிபொருள் சந்தை பாதிக்கப்படுவதற்கு முந்தைய விலை.
"பிப்ரவரி 28-க்கு பிறகுதான் மேற்கு ஆசியாவில் இந்த நெருக்கடி ஏற்பட்டது. அதனால், ஏப்ரல் மாதம் முழுவதும் விமான எரிபொருள் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் இருந்தது. மே 1-ம் தேதி விலை வெளியிடப்பட்டபோது, அது 142 ரூபாயாக இருந்தது. இதுதான் IPP விலை" என்று ராஜ் கூறினார்.