தற்போதைய விதிகளின்படி, பொதுவான வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டில் ரூ.1 கோடியைத் தாண்டி ரொக்கமாக பணம் எடுத்தால் மட்டுமே TDS தொடர்பான விதிகள் பொருந்தக்கூடும். ரூ.10 லட்சம் அல்லது ரூ.20 லட்சம் எடுத்தாலே TDS பிடிக்கப்படும் என்பது தவறான புரிதல்.
வருமான வரி நோட்டீஸ் வருமா?
ரூ.10 லட்சம் பணம் எடுத்ததற்காக மட்டுமே நோட்டீஸ் வராது. ஆனால்:
அறிவிக்கப்பட்ட வருமானத்துடன் பரிவர்த்தனை பொருந்தவில்லை என்றால்,
வருமான வரி கணக்கில் காட்டப்படாத வருமானம் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால்,
பெரிய அளவிலான ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு ஆதாரங்கள் இல்லாவிட்டால்,
வருமான வரித்துறை விளக்கம் கேட்கலாம்.