10 ஆண்டுகளுக்கு குறைவாக EPFO கணக்கில் பங்களித்தவராக இருந்தால், இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இனி வேலையைச் செய்ய விரும்பவில்லை என்று முடிவு எடுத்திருந்தால், PF தொகையுடன் ஓய்வூதியத் தொகையையும் திரும்பப் பெறலாம். ஒருவேளை, எதிர்காலத்தில் மீண்டும் வேலையில் சேரலாம் என்று நினைத்தால், பென்ஷன் திட்டச் சான்றிதழை எடுத்துக் கொள்ளலாம். மீண்டும் எப்போது புதிய வேலையில் சேர்ந்தாலும், அந்தச் சான்றிதழ் மூலம் முந்தைய ஓய்வூதியக் கணக்கை புதிய வேலையுடன் இணைக்கலாம். இதன் மூலம், 10 வருட பங்களிப்பை புதிய வேலை மூலம் ஈடு செய்து, 58 வயதிலிருந்து ஓய்வூதியம் பெறலாம்.