சிலர் தெரிந்த மெக்கானிக்குகள் மூலம் டூப்ளிகேட் Key Fob செய்வதற்கும் முயற்சி செய்கிறார்கள். இது ஆபத்தானது. சரியான சிஃப்டு இல்லாமல் கார் திருடு போக வாய்ப்பு உண்டு. ஒரு சாவி இருந்தால் போதும் என நினைத்து, நீண்ட நாட்கள் ஸ்பேர் கீயை மட்டுமே பயன்படுத்துவது தவறு. புது சாவிக்காக 30 நாட்களில் க்ளெய்ம் செய்யாவிட்டால், இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு செயலிழக்கும். சிலர் "No Claim Bonus" (NCB) க்கு பாதிப்பு ஏற்படுமா என பயப்படுகிறார்கள். ஆனால், பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் சாவிக்கான க்ளெய்ம்கள் NCBஐ பாதிக்காது.
சாவிக்கும் உண்டு காப்பீடு
புதிய கார் வாங்கும் போது, Key Protect Add-on உடன் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. இது வழக்கமாக எல்லா கார்கள், குறிப்பாக ஸ்மார்ட் கீ கொண்ட கார்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் கார் மதிப்பும் பாதுகாப்பும் நிலைத்திருக்கும். மேலும், எதிர்காலத்தில் விற்பனை செய்யும் போது இரண்டு சாவிகள் இருந்தால்தான் அதிக மதிப்புடன் விற்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.Key Fob ப்ராப்ளம்களுக்கு அனுமதிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர் மூலமாகவே வழிகாட்டல் பெறுங்கள்.மெக்கானிக்க் டூப்ளிகேட் செயல்களில் திருட்டு அபாயம் உள்ளது. Key Fob என்பது கம்ப்யூட்டர் பாதுகாப்பு சிஸ்டத்துடன் இணைந்தது என்பதே இதன் முக்கியத்துவம்!