நீண்ட நாள் கால அவகாசத்திற்குப் பிறகு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைத்தே ஆக வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நீலையில், மீண்டும் மேலும் 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை ஜூம் 30ம் தேதிக்குள் இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு ஆதாருடன் இணைக்காதவர்கள், 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் தங்கள் பான் கார்டை எந்தவிதமான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது. 10 இலக்க பான் (நிரந்தர கணக்கு எண்) செயலிழந்துவிடும்.
இன்றே ஆதாருடன் பான்கார்டைஇணையுங்கள். அனைவரும் கட்டாயமாகச் செய்ய வேண்டும், தாமதிக்காதீர்கள்.
வருமானவரிச்சட்டத்தின்படி, விதிவிலக்குப்பட்டியலில் இருப்பவர்களைத் தவிர அனைவரும் ஆதார் எண்ணுடன் பான்கார்டை இணைக்க வேண்டும். 2023, மார்ச் 31ம் தேதி கடைசித் தேதியாகும் இதை செய்யாவிட்டால், பான்கார்டு செயலிழந்துவிடும்”
ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்காதவர்கள் வருமானவரி ரிட்டனையும் தாக்கல் செய்ய முடியாது.