இந்தியாவின் UPI அமைப்பு தற்போது மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமெண்ட் முறையாக உள்ளது.
2025ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட அறிக்கையின்படி, பரிவர்த்தனை எண்ணிக்கையின் அடிப்படையில் UPI உலகின் மிகப்பெரிய சில்லறை விரைவு பணப்பரிவர்த்தனை அமைப்பாக உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் UPI மூலம் 24.51 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.29.82 லட்சம் கோடி ஆகும்.
இந்த பரிவர்த்தனைகளில் Google Pay மற்றும் Walmart நிறுவனத்துக்குச் சொந்தமான PhonePe ஆகியவை இணைந்து சுமார் முக்கால் பங்கு பரிவர்த்தனை அளவை கொண்டுள்ளன.
வங்கிகளுக்கு புதிய வருவாய் வாய்ப்பு?
ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் சில வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டால், அது வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்கு புதிய வருவாய் வாய்ப்பை உருவாக்கலாம்.
Jefferies நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, இதுபோன்ற கட்டணங்கள் நடைமுறைக்கு வந்தால், பேமெண்ட் துறைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.5,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில்...
ரூ.2,000 வரை UPI பரிவர்த்தனைகள் மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வங்கி அல்லது பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்க முடியாது என்பதே இந்த புதிய உத்தரவின் முக்கிய அம்சமாகும். அதே நேரத்தில், ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட வணிக UPI பரிவர்த்தனைகளில் எதிர்காலத்தில் MDR போன்ற கட்டணங்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.