உரிய உரிமை கோருபவர்களை உரிய நேரத்தில் கண்டறிவதை உறுதி செய்வதற்கும், தற்போதுள்ள உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்களின் இருப்பையும், புதிதாகச் சேரும் சொத்துக்களின் அளவையும் குறைப்பதற்கும், குடிமக்களுக்கான உரிமை கோரும் செயல்முறையை எளிமையாக்கி விரைவுபடுத்துவதற்கும், நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகளால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இறையாண்மை பசுமைப் பத்திரங்களில் (SGrBs) முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அரசாங்கம் ஆய்வு செய்துள்ளதாகக் கூறினார்.
ஏலத்தில் பத்திரங்களை வாங்குவதற்கான ஆர்வத்தின் குறியீடான, SGrBs-க்கான சராசரி ஏல-ஈடு விகிதம், 2022-23 நிதியாண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 2-க்கு மேல் இருந்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் ஏல-ஈடு விகிதம் 2.32 ஆக உள்ளது.