ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. UIDAI நிறுவனம் ஆதார் PVC கார்டு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது ரூ.50 ஆக இருக்கும் கட்டணம், ரூ.75 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த புதிய கட்டணம் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஆதார் PVC கார்டு பலருக்கும் விருப்பமான அடையாள அட்டை வடிவமாக மாறியுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு கவனத்தை ஈர்க்கிறது. UIDAI விளக்கத்தின் படி, அச்சிடும் செலவு, மூலப்பொருட்கள், பாதுகாப்பான பிரிண்டிங் மற்றும் ஸ்பீட் போஸ்ட் டெலிவரி செலவுகள் அதிகரித்ததால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.