பைனான்ஸ் நிறுவனங்கள் உங்களை கட்டாயப்படுத்தி கடனை வசூலிக்கிறதா? உதயநிதி வெளியிட்ட முக்கிய அப்டேட்

Published : Apr 26, 2025, 03:04 PM IST

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை, வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என துணைமுதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

PREV
14
பைனான்ஸ் நிறுவனங்கள் உங்களை கட்டாயப்படுத்தி கடனை வசூலிக்கிறதா? உதயநிதி வெளியிட்ட முக்கிய அப்டேட்
Udhayanidhi Stalin

தமிழ்நாடு பணக்கடன்கள் வழங்குபவர்கள் சட்டத்தை திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை தமிழக துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி தனிநபர்கள், தனி நபர்கள் குழு, சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். 
 

24
Small Finance

வலுக்கட்டாய கடன் வசூல்

வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல். இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க  குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம். 
 

34
Small Finance

கடன் வசூலில் கட்டுப்பாடுகள்

கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்ட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்காட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 
 

44
Small Finance

பிணையில் வெளிவரமுடியாத தண்டனை

வலுக்கட்டாய நடவடிக்கைகளால் கடன்பெறுபவர் அல்லது அவரது உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள். இச்சட்டமுன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் பிணையில் வெளிவரமுடியாது.

Read more Photos on
click me!

Recommended Stories