பயண நேரம், எரிபொருள் பெரிதும் சேமிக்கப்படும்.
முன்னதாக, சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த 3 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். பின்னர் ஃபாஸ்டேக் அறிமுகமானதால், அந்த நேரம் 60 விநாடிகளாக குறைந்தது. இப்போது MLFF நடைமுறைக்கு வந்தால், கார்கள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் தடையின்றி சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முடியும். இதனால் பயண நேரம் குறைவதோடு, எரிபொருளும் பெரிதும் சேமிக்கப்படும்.
இந்த புதிய தொழில்நுட்பம் ஆண்டுதோறும் சுமார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள எரிபொருள் சேமிப்பை ஏற்படுத்தும் என்றும், அரசின் வருவாய் ரூ.6,000 கோடி வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், 2026க்கு பிறகு ஊருக்கு போகும் பயணம் இன்னும் சுகமாகவும், செலவுச்சுருக்கமாகவும் மாறப் போகிறது.