Indian Railway: இந்த ரயில்ல மட்டும் போனீங்கன்னா! சூடான சுவையான இலவசமாக உணவு கிடைக்குமாம்!

First Published Oct 7, 2024, 7:59 PM IST

Free Food on Train: இந்தியாவில் ஒரு ரயில் பயணத்தில் பயணிகள் தங்கள் பயணம் முழுவதும் இலவச உணவை அனுபவிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு குறுகிய பயணம் அல்ல, ஆனால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணத்தில் சுவையான, சூடான உணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்திய பொதுப் போக்குவரத்து துறையில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பாதுகாப்பான பயணம் அத்தியாவசிய வசதிகள், குறைந்த கட்டணம் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் ரயிலில் பயணம் செய்யவே விரும்புகிறார்கள்.நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே சுற்றுலா செல்ல விரும்புபவர்கள், கூட்ட நெரிசல் இல்லாமல் வசதியான பயணத்தை விரும்பும் முதியவர்கள், கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள்... அனைவருக்கும் ரயிலில் பயணம் செய்யவே ரொம்ப பிடிக்கும். ஆனால் வசதியான பயணத்துடன், உணவும் இலவசமாகக் கிடைத்தால் அந்தபயணம் இன்னும் இனிமையாக இருக்கும். இலவச உணவை வழங்கும் அத்தகைய ஒரு ரயில் சேவை நம் நாட்டில் இயங்கி வருகிறது. 

ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்வது மிகவும் வசதியானது. ஆனால் உணவு ஒரு பிரச்சனை. ரயில்களில் வழங்கப்படும் உணவு சுவையாகவோ சுத்தமாகவோ இருக்காது. வயிற்று பசிக்காகவே மட்டுமே சாப்பிடலாமே தவிர வேறு யாரும் ரயில்வே உணவை விரும்பமாட்டார்கள். நீண்ட பயணத்திற்கு வீட்டிலிருந்து உணவை சமைத்து எடுத்துச் செல்ல முடியாது. அப்படி எடுத்து சென்றாலும் அது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருக்கும். பிறகு கெட்டுபோகிவிடும். 

நீங்கள் எந்த ரயிலில் பயணம் செய்தாலும், உணவு ஒரு பிரச்சனையாக இருக்கும். ஆனால் நீங்கள் இந்த ரயில் பயணத்தால் உணவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பயணிகள் எந்த பணத்தையும் செலவு செய்யாமல் சுவையான உணவை அனுபவிக்க முடியும். ஒன்று இரண்டு அல்ல, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம், பயணிகளுக்கு இலவசமாக சுவையான சூடான உணவு கிடைக்கும். 

Latest Videos


இந்த ரயிலில் பயணிகளுக்கு இலவச உணவு : 

அமிர்தசரஸ் சீக்கியர்களின் புனித யாத்திரை தலமாகும். இந்த நகரத்தில் உள்ள பொற்கோவிலுக்கு (ஹர்மந்திர் சாகிப்) லட்சக்கணக்கான சீக்கியர்கள் வருகை தருகின்றனர். இங்கிருந்து அவர்கள் மற்றொரு சீக்கிய புனித யாத்திரை தலமான நந்தேட் ஹசூர் சாகிப்பை தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த வழியில், சீக்கியர்களின் ஆன்மீக பயணம் பஞ்சாபிலிருந்து மகாராஷ்டிரா வரை தொடர்கிறது.  

அமிர்தசரஸ் மற்றும் நந்தேட் இடையே சீக்கிய யாத்திரையின் பின்னணியில் இந்திய ரயில்வே சச்ச்கண்ட் எக்ஸ்பிரஸ் (12715) ஐ இயக்குகிறது.  இந்த சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் தினமும் இயக்கப்படுகிறது. இது நாட்டின் தலைநகர் புது டெல்லி மற்றும் போபால் வழியாகச் செல்லும் குருத்வாராக்களை இணைக்கும் மிக முக்கியமான ரயில் சேவையாகும்.  

இருப்பினும், அமிர்தசரஸ் மற்றும் நந்தேட் இடையே உள்ள தூரம் 2,081 கி.மீ. சீக்கியர்கள் தங்கள் புனித தலங்களை தரிசிக்க இவ்வளவு தூரம் பயணம் செய்கிறார்கள். எனவே இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பசியைத் தீர்க்க இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. பயணிகளுக்கு சுவையான சூடான பஞ்சாபி உணவுகள் வழங்கப்படுகின்றன. 
 

அமிர்தசரஸ் மற்றும் நந்தேட் இடையே இயக்கப்படும் இந்த சச்ச்கண்ட் எக்ஸ்பிரஸ் பல்வேறு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இந்த ரயில் மொத்தம் 39 இடங்களில் நின்று செல்கிறது. இந்த ரயில் நிற்கும் ரயில் நிலையங்களில் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவு ஏற்பாடுகள் மொத்தம் ஆறு ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த சீக்கியர்கள் தங்கள் மக்களுக்காக சமூக சமையலறை அமைத்துள்ளனர். 

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்பட்டது. இருப்பினும், இது 2007 முதல் தினசரி சேவையாக மாற்றப்பட்டது. இந்த சச்ச்கண்ட் எக்ஸ்பிரஸ் சேவை மூன்று தசாப்தங்களாக இயங்கி வருகிறது. தினமும் 2,000 க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.  இந்த ரயில் ஆன்மீக பயணத்தில் இருப்பதால், அனைத்து பயணிகளுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. 

இந்த சச்ச்கண்ட் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் மன்மத், டெல்லி, புசாவள், போபால், குவாலியர் மற்றும் நந்தேட் ரயில் நிலையங்களில் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த லாங்கர் சீக்கியர்களின் புனித தலங்களான குருத்வாராக்களின் ஆதரவின் கீழ் நடந்து வருகிறது. கதி சாவ்ல், தால், சப்ஜி போன்ற சைவ உணவுகள் தினமும் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு சூடாக வழங்கப்படுகிறது. சச்ச்கண்ட் எக்ஸ்பிரஸின் பயணிகள் இந்த சுவையான உணவுடன் தங்கள் பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடர்வார்கள். 

click me!